சென்னை : தமிழ்நாட்டில் வைகோ , அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 6 எம்.பி.க்களின் மாநிலங்களவை பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதி உடன் நிறைவடைய உள்ள நிலையில், ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது, வைகோ, அன்புமணி, எம்.எம் அப்துல்லா, வில்சன், சண்முகம், சந்திரசேகர் ஆகியோரது பதவிக்காலம் நிறைவடைகிறது. இந்த தேர்தலுக்கு ஜூன் 19ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். ஜூன் […]
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சிந்தியா வேட்பு மனுதாக்கல் செய்தார். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா இன்று டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பின்னர் அவருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சிந்தியா வேட்பு மனுதாக்கல் செய்தார்.