மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில் பயின்று வந்த 4 வயது சிறுமி ஆருத்ரா பள்ளி வளாகத்தில் திறந்து கிடந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று அச்சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனியார் பள்ளி தாளாளர் திவ்யாவை கைது செய்தனர். மேலும், 6 […]