சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ஒரு பொது நல மனுவை விசாரித்த நீதிபதி ஆர். சுரேஷ் குமார், இந்த உத்தரவை பிறப்பித்தார். பொது மக்கள் பயன்படுத்துவதால் கழிப்பறைகளின் பராமரிப்பு பாதிக்கப்படுவதாகவும், இது பெட்ரோல் நிலையங்களுக்கு நிதிச்சுமையாக உள்ளதாகவும் எரிபொருள் நிறுவனங்கள் தரப்பில் வாதிடப்பட்டது. […]
கிராமப்புற பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு பணிக்காக ரூ.36.5 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை. தமிழகத்தில் கிராமப்புறங்களில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் ,கழிப்பறைகள் மற்றும் பள்ளி வளாகங்களை சுத்தம் செய்தலுக்காக செப்டம்பர் 21 முதல் ஏப்ரல் 22 வரைக்கான நிதியான ரூ.36.50 கோடியை மாநில நிதி ஆணையத்தின் (SFC) மானியத்தை பயன்படுத்த அனுமதி மற்றும் உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும்,காலை மற்றும் மதியம் ஒரு முறை என […]