சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா அவர்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா,அரசியலையும், ஆன்மீகத்தையும் ஒன்றாக இணைத்து நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்.தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் இதழ் ஆசிரியர். பிறப்பு: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு பகுதியில் 1884 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி சுப்பிரமணிய சிவா பிறந்தார்.1903 ஆம் ஆண்டு ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் என்பவர் இவரது […]