தூத்துக்குடி: வங்கக்கடலில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவியதால் நேற்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்தது. மேற்கண்ட மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் நீர்நிலைகள் நிரம்பி வரும் நிலையில், தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் 50,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. […]