இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4 ஆண்டுகள், 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2023 செப்டம்பர் 28ஆம் தேதி இரவு டேனியல் கிரஹாம், ஆடம் கார்ருதர்ஸ் எனும் இருவர் ரம்பத்தை பயன்படுத்தி மரத்தை வெட்டியிருக்கின்றனர். மேலும், அதனை வீடியோ ஆகவும் பதிவு செய்திருந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், வடகிழக்கு இங்கிலாந்தின் நியூகேஸில் கிரவுன் நீதிமன்றத்தில் […]
சென்னை : ஹைதராபாத்தில் மருத்துவமனைக்குச் சென்ற தம்பதியினர் மீது மரம் விழுந்ததில் கணவர் உயிரிழந்தார். மனைவி படுகாயம் அடைந்தார். இன்று ஹைதராபாத்தில் உள்ள பொலராம் அரசு மருத்துவமனைக்கு தம்பதி இரு சக்கர வாகனத்தில் மருத்துவ சோதனைக்காக வந்தபோது துயரமான சம்பவம் நிகழ்ந்தது. மருத்துவ சோதனை முடிந்து வீட்டிற்கு பைக்கில் கிளம்பும் போது மருத்துவமனை வாசலில் நின்று கொண்டு இருந்த மரம் ஒன்று திடீரென சரிந்து கீழே விழுந்தது. இதில், கணவர் ரவீந்திரா மரம் மேலே விழுந்ததில் பரிதாபமாக […]
நல்ல மழைக்கு ஈஷா வழங்கியிருக்கும் 8 கோடி மரங்களும் ஒரு காரணம் என காவேரி கூக்குரல் இயக்க விழாவில் தமிழக விவசாய சங்க தலைவர் பாராட்டு. காவேரி கூக்குரல் இயக்கமும் கோவை கட்டுனர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் இணைந்து கோவையைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக இரண்டாம் தவணையாக 1 லட்சம் மரங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. காவேரி கூக்குரல் இயக்கத்தின் நோக்கம் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நடுவதாகும். […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்டந்தோறும் 1,000 மரக்கன்றுகள் வீதம் 38,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். மேலும் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு பல மக்கள் நலத் திட்டங்களை முதல்வர் இன்று துவக்கி வைக்க உள்ளார். அதன்படி, […]
தெலுங்கானாவில் நல்கொண்டா கிராமத்தை சேர்ந்த, சிவா என்ற 18 வயது இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மரத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தெலுங்கானாவில் நல்கொண்டா கிராமத்தை சேர்ந்த, சிவா என்ற 18 வயது இளைஞனுக்கு மே 4-ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, இவர் தனது குடும்பத்திற்கு கொரோனா பரவுவதை தடுப்பதற்காக 11 நாட்கள் மரத்திலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். இவர் தனது வீட்டின் வளாகத்தில் உள்ள ஒரு மரத்தின் […]
சமரேந்திர பெஹேரா என்னும் அந்த ஓவியக் கலைஞர் மயூர்பஞ்சில் உள்ள சிமிலிபால் தேசிய பூங்காவில் ஒரு மரத்தில் மோடியின் உருவத்தை செதுக்கி உள்ளார். ஒடிசா மாநிலம் மயூர்பஞ்சில் உள்ள சிமிலிபால் என்ற தேசிய பூங்காவில் சிற்ப கலைஞர் ஒருவர், பிரதமர் மோடியின் உருவப்படத்தை மரத்தில் செதுக்கி, வித்தியாசமான முறையில் தனது கோரிக்கையை தெரிவித்துள்ளார் சமரேந்திர பெஹேரா என்னும் அந்த ஓவியக் கலைஞர் மயூர்பஞ்சில் உள்ள சிமிலிபால் தேசிய பூங்காவில் ஒரு மரத்தில் மோடியின் உருவத்தை செதுக்கி உள்ளார். […]
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ரூ.447.32 கோடி செலவில் அரசு மருத்துவ கல்லூரி அமையவுள்ளது. இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை மாதம்மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், ஊட்டி வனப்பகுதியில் அமையவுள்ள மருத்துவ கல்லூரி க்காக அங்கு 1,838 அயல்நாட்டு மரங்களை வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியள்ளது. கல்லூரி அமையவுள்ள 25 ஏக்கரில் மண் சார்ந்த மரங்கள் ஏதும் இல்லை, 90% யூக்கலிப்டஸ் மரங்களே என தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. வெட்டப்படும் […]
இயற்கையின் சீற்றம் நாம் எதிர்பார்த்த வண்ணம் தான் வரும் என்று சொல்ல முடியாது. நாம் நினைத்து பார்த்திராத வகையில், இயற்கை பேரழிவுகள் ஏற்படுகிறது. இந்த நிகழ்வுகள் எல்லாம் நாடன் பின் தான், இப்படியெல்லாம் நடக்குமா என்று சிந்தித்து ஆச்சரியப்படுகிறோம். அந்த வகையில், நீண்டு வளர்ந்து உயரமான மரத்தை மின்னல் தாக்கியுள்ளது. இதனையடுத்து, இம்மரத்தின் உட்புறம் மற்றும் தீ பிடித்து எரிகின்றது. இது பார்ப்பதற்கே ஆச்சரியமான காட்சியாக உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதனை […]
ஜக்கி வாசுதேவ் ஒரு மரத்திற்கு 42 ரூபாய் என பணம் வாங்காமல் தமிழகம் முழுவதும் மரம் நட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,நாட்டில் ஏற்பட்டிருக்கும் புவி வெப்பமயமாதலைத் தடுக்க காலநிலை அவசர நிலை பிரகடனத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் .மேலும் புவி வெப்பமயமாதலால் ஏற்படும் தட்பவெட்ப சூழ்நிலைகள் குறித்து மாணவிகள் மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் . ஈஷா மையத்தின் […]
டெல்லியில் கடை நடத்தி வரும் ஒருவர் முறையாக கடை வாடகை கொடுக்காமல் இருந்ததால் கடை உரிமையாளர் மின் இணைப்பை துண்டித்து விட்டார்.பின்னர் அந்த கடைக்காரர் மின் கம்பத்தில் இருந்து நேரடியாக மின்இணைப்பு கொடுத்து பயன்படுத்தி வந்தார். இதை அறிந்த மின்சார வாரியம் கடையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்தது. அப்போது கடை உரிமையாளர் தனக்கு தெரியாமல் கடைக்காரர் இணைப்புக் கொடுத்து பயன்படுத்தியதாக மின்வாரியத்திடம் கடை உரிமையாளர் கூறினார். பின்னர் வாடகைக்கு இருந்த கடைக்காரன் மீது மின் வாரியம் […]
இன்றைய நிலையில், இயற்கையை பொறுத்தவரையில் பாதி அழிந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். தங்களது சுயநலத்திற்காகவும், தங்களின் தனிப்பட்ட தேவைகளுக்காகவும் மக்கள் மரங்களை அழிக்கின்றனர். இதனால், பருவநிலை மாற்றம், இயற்கை பேரழிவு என பல ஆபத்தான நிலைகள் ஏற்படுகிறது. இந்நிலையில் மணிப்பூரை சேர்ந்த 9 வயது சிறுமியான எலங்பம் வாலண்டினா தேவி, தற்போது இவர் 5-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் 1-ம் வகுப்பு பயிலும் போது, ஆற்றங்கரையில் 2 குல்முகர் மரங்களை நட்டு, அதனை […]
கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் நாகை மற்றும் கடலூர் மாவட்டங்கள் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்தது. பல மனிதர்களின் உயிரை காவு வாங்கிய கஜா புயல், மரங்களை மட்டும் விட்டு வைக்குமா? இந்நிலையில், வேதாரண்யம் அருகே உள்ள மறையநல்லூர் உச்சகட்டளையில் உள்ள இருநூறு ஆண்டுகள் பழைமையான ஆலமரம் வேரோடு சாய்ந்தது. இந்த ஆலமரம் தான் அந்த கிராமத்தின் அடையாளமாகவே இருந்துள்ளது. இதனையடுத்து, இந்த பழைமையான ஆலமரத்தை மீட்டெடுப்பதற்காக, அந்த கிராம மக்கள் தங்களது சொந்த செலவில் […]
நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், இயற்கையின்மீதும் அக்கறை கொண்டவராக வலம் வருகிறார். இந்நிலையில், இவர் ஊட்டியில் மரம் நட போவதாக கூறியுள்ளார். அதற்க்கு ஒருவர், மரமிலலாத இடங்களில் மரம் நடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்க்கு பதிலலிலத்த நடிகர் விவேக், “ஊட்டியில் நிறைய மரங்கள் இருக்கலாம். ஆனால் மழை இலலை. காரணம் யூக்கலிப்ட சில்வர்ஓக், கிருத்துமசு மரங்களால் மலையை ஈர்க்க முடியாது. அவை […]
தமிழகத்தில் மக்கள் தண்ணீருக்காக தவித்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிற நிலையில், மக்கள் தண்ணீரை தேடி பல இடங்களில் அழைக்கின்றனர். இதனையடுத்து, பல்வேறு தலைவர்கள் இதற்கான வழிகளை சொன்னாலும் அவையெல்லாம் இனி வரும் காலங்களில் தான் நிறைவேற்ற முடியும். தற்போது உள்ள நிலைக்கு இதுவரை முழுமையான முடிவு கிடைக்கவில்லை. இந்நிலையில், ட்வீட்டரில் ” தமிழகம் காக்க மரம் வளர்ப்போம்” என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
பனைமரத்தின் இலை,காய் மற்றும் மரத்தின் அனைத்து பகுதிகளும் மனிதர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது.அது ஒவ்வொன்றும் பல மருத்துவ பண்புகளை கொண்டுள்ளது. அதில் பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளன. இவை குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும். பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காயவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால், உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும். பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால், உடல் […]
மேலூர் அருகில் உள்ள கீழையூரில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டதாக அறிவிப்பு பலகை ஒன்று திருப்பத்தூர் மேலப்பட்டி சாலையில் வைக்கப்பட்டுள்ளது. 868 மனித சக்தி நாட்கள் இதற்காக செலவிடப்பட்டதாகவும், அதற்காக தினசரி ஊதியம் ரூ.205 தரப்பட்டதாகவும் அதில் உள்ளது. மூலப்பொருட்கள் ரூ. 5ஆயிரத்திற்கு வாங்கி மனித சக்திக்காக ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் செலவிடப்பட்டதாகவும் அதில் உள்ளது.ரூ.1.83 லட்சம் செலவில் கிராம ஊராட்சியில் மரக்கன்று நடப்பட்டதாக அறிவிப்பு பலகை மட்டுமே உள்ள நிலையில், […]
ஆடி மாத பழங்களில் ஒன்று நாவல் பழம். எல்லோரும் அதிகம் விரும்பி உண்ணக்கூடிய பழம் நாவல். நீரிழிவு நோயை கட்டுப்படுத்த நாவல் பழத்தின் விதைகள் சிறந்த மருந்து. இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு கிராம் அளவு தூளை, காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் போதும். படிப்படியாக நீரிழிவு நோய் கட்டுப்படும். நாவல் மரத்தின் பட்டைகள் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும். 10 சென்டி மீட்டர் […]