ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. மேலும், இந்தக் கண்காட்சியைப் முதலமைச்சர் பார்வையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையிலிருந்து கோவை சென்று, அங்கிருந்து உதகைக்கு பயணம் மேற்கொண்டார். தற்பொழுது, மேட்டுப்பாளையம் வழியாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். இந்தப் பயணத்தின் மற்றொரு முக்கிய அம்சம், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் […]