கூகுள் மேப்-ஐ இன்டர்நெட் வசதி இல்லாமலும் நம்மால் எப்படி அதனை பயன்படுத்தி கொள்ளமுடியும் என சிறு குறிப்பாக பார்க்கலாம்.
கூகுள் மேப் என்பது தற்போதைய காலகட்டத்தில் வழி கேட்கும் பெட்டிக்கடை போல நம்மில் கலந்துவிட்டது. முன்பெல்லாம் வழி தெரியா இடங்களுக்கு சென்றால், அல்லது செல்வதற்கு ஆயத்தமானல் அங்குள்ள பெட்டிக்கடை, அப்பகுதி மக்கள் என வழி கேட்டு செல்வோம்.
நாம் செல்லும் நேரத்தில் அப்படி யாரும் இல்லை என்றால் சிக்கல் தான். ஆட்கள் அல்லது வாகனம் ஏதேனும் வருகிறதா என பார்த்து செல்ல வேண்டிய சூழல் நிலவியது. ஆனால், தற்போது கூகுள் மேப்பால் அந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது என்றே கூறலாம். அந்தளவுக்கு கூகுள் மேப் ஓட்டுனர்களுக்கு பெரிய பேருதவியாக இருந்து வருகிறது.
ஆனால், அதற்கு நம்மிடம் ஸ்மார்ட் போன் இருக்க வேண்டும். அதில் இன்டர்நெட் கனெக்ஸன் இருக்க வேண்டும். இவை இருந்தால் மட்டுமே இது சாத்தியமாக இருந்தது.
ஆனால், இந்த கூகுள் மேப்பை இன்டர்நெட் இல்லாமலும் பயன்படுத்தலாம். அது நம்மில் பலருக்கு தெரியாமல் இருந்து வந்தது. தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக தெரியவந்துள்ளது.
அதாவது முதலில் கூகுள் மேப் நமது ஸ்மார்ட் போனில் இருக்க வேண்டும். அதில் நமது புகைப்படம் இருக்கும் வலதுபக்க மேற்பகுதியை க்ளிக் செய்ய வேண்டும். அதில் ஒரு பக்கம் ஓபன் ஆகும்.
அதில், ஆஃப் லைன் மேப்-ஐ க்ளிக் செய்ய வேண்டும். அதில் செலக்ட் யுவர் ஓன் மேப் எனும் பகுதியை க்ளிக் செய்ய வேண்டும். அதில் காட்டப்படும் நீல கலர் கட்டத்திற்குள் எந்த பகுதியின் மேப் வேண்டுமோ அதனை இன்டர்நெட் இருக்கும் போதே தேர்வு செய்து சேமித்து வைத்து கொள்ள வேண்டும். அதனை இன்டர்நெட் இல்லாத சூழலில் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…