UPI ATM [Imagesource : informalnewz]
இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட்கள் என்பது அதிக அளவில் பிரபலமடைந்து வருகின்றன. அதில் வங்கி பரிமாற்றங்கள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், மொபைல் பேமெண்ட், ஆன்லைன் வாலட் போன்ற பேமெண்ட் முறைகள் உள்ளது. இதில் ஒரு சில மக்கள் பேங்க் மற்றும் ஏடிஎம்க்குச் சென்று நேரடியாகப் பணத்தை எடுக்கின்றனர். ஆனால் பெரும்பாலான மக்கள் இந்தியாவில் மிகவும் பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் முறையான யுபிஐ (UPI-யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) பயன்படுத்துகின்றனர்.
யுபிஐ:
இந்தியாவில் நடக்கும் அனைத்து சில்லறை டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 75 சதவீதத்திற்கும் மேல் யுபிஐ பரிவர்த்தனை உள்ளது. இது சுமார் 330 மில்லியன் தனிப்பட்ட பயனர்களைக் கொண்டுள்ளது. இந்த யுபிஐ பயன்பாடுகளின் பட்டியலில் போன்பே, கூகுள்பே மற்றும் பேடிஎம் போன்ற பரிவர்த்தனை செயலிகள் முன்னணியில் உள்ளன. 70 மில்லியனுக்கும் அதிகமான வணிகர்கள் 256 மில்லியன் க்யூஆர் (QR) குறியீடுகளைப் பயன்படுத்தி யுபிஐயைப் பயன்படுத்துகின்றனர்.
ஏடிஎம்மிலும் யுபிஐ:
இந்நிலையில், தற்போது ஏடிஎம்மிலும் டெபிட் கார்டு இல்லாமலும் கூட, யுபிஐ-ஐ பயன்படுத்தி பணம் எடுக்கும் வசதியானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜப்பானில் உள்ள ஹிட்டாச்சி லிமிடெட்டின் துணை நிறுவனமான ஹிட்டாச்சி பேமென்ட் சர்வீசஸ், நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) உடன் இணைந்து, ஹிட்டாச்சி மனி ஸ்பாட் யுபிஐ ஏடிஎம்மை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய வசதி மூலம் ஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்கள் தங்கள் மொபைலில் இருக்கும் யுபிஐ பேமெண்ட் அப்பை பயன்படுத்தி க்யூஆர் (QR) குறியீடு மூலம் பணத்தை எடுக்க முடியும். இந்த யுபிஐ ஏடிஎம் மூலம் தடையற்ற மற்றும் பாதுகாப்பான முறையில் பண பரிமாற்றம் செய்துகொள்ள முடியும். இந்த யுபிஐ ஏடிஎம் (UPI ATM) ஆனது இன்னும் பொது பயன்பாட்டிற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறு பணம் எடுப்பது.?
இது டெபிட் கார்டைப் பயன்படுத்துவதை விட இது மிகவும் வசதியானது. இதற்கு உங்கள் டெபிட் கார்டை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. டெபிட் கார்டைப் பயன்படுத்துவதை விட இது மிகவும் பாதுகாப்பானது மற்றும் வேகமானது. இதற்கிடையில், யுபிஐ ஆனது, 2023ல் முதல் முறையாக 10 பில்லியன் பரிவர்த்தனைகளை கடந்துள்ளது.
அதன்படி, முந்தைய மாதங்களை விட ஆகஸ்ட் மாதத்தில் பணப்பரிவர்த்தனையானது 10 பில்லியனைக் கடந்துள்ளது. இது ஒட்டுமொத்த உலக மக்கள்தொகையை விட தோராயமாக 2 பில்லியன் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…