12 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு பைசர் – பையோஎன்டெக் கொரோனா தடுப்பூசி போட சிங்கப்பூர் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்குதல் வேகமெடுத்துள்ளது. இதனால், சிங்கப்பூர் அரசு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதில் அதிகமான அளவில் சிறுவர்களுக்கு தொற்று ஏற்படுவதால் அதை சரி செய்யும் பொருட்டு 12 – 15 வயது வரை உள்ளவர்களுக்கு பைசர்-பையோஎன்டெக் என்ற நிறுவனத்தின் தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளார் அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஓங் இ காங்.
மேலும், சமீப காலமாக பள்ளி மாணவர்கள் அதிகளவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுகின்றனர். இது கடந்த ஆண்டை விட அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சகத்தின் மருத்துவ சேவைத்துறை இயக்குனர் கென்னத் மாக் தெரிவித்தார். மேலும், சிறுவர்களிடம் போதுமான அளவு விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனால், 12 – 15 வயது மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் முடிவெடுக்கப்படும் என்று ஓங் இ காங் கூறியுள்ளார்.
அதன் பிறகு, தற்போது பைசர்-பையோஎன்டேக் தடுப்பூசி போடுவதால் அதிக செயல்திறன் மற்றும் பாதுகாப்பு ஏற்படும் என்று சுகாதார அறிவியல் ஆணையமும், நிபுணர் குழுவும் ஓப்புதல் அளித்துள்ளது. மேலும் இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் பெரியவர்களுக்கு கிடைக்கக்கூடிய செயல்திறன், பாதுகாப்பு 12-15 வயது சிறுவர்களுக்கு கிடைக்கும் என்று திரு ஓங் கூறியுள்ளார்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…