சீனாவில் உள்ள ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.இதைத்தொடர்ந்து அந்த கர்ப்பிணி பெண்ணை தலைநகர் ஹர்பினில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு கடந்த 30-ம் தேதி ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தாக்கியது உறுதியானது. பின்னர் மருத்துவர்கள் குழந்தைக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் இருக்க உடனடியாக ஆபரேஷன் செய்து குழந்தையை எடுக்க முடிவு செய்தனர்.
பின்னர் அன்றே மருத்துவர்கள் ஆபரேஷன் மூலம் அந்த கர்ப்பிணிக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் எடை 3 கிலோவாகவும் இருந்தது. அடுத்த மறுநாள் 31-ம் தேதி குழந்தைக்கு மருத்துவர்கள் ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தாக்கவில்லை என உறுதி செய்யப்பட்டது. தற்போது தாயையும், சேயையும் தனிவார்டில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். குழந்தை பிறந்த பிறகு தாய்க்கு உடல் வெப்ப நிலை குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வரை கொரோனா வைரஸ் பெய்ஜிங் , ஷாங்காய் ,ஹூபே போன்ற பல நகரங்களில் பரவி உள்ளது. கொரோனா வைரசால் பலியானோர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டு வருகிறது.
இந்த கொரோனா வைரஸ் தாக்கியதில் இதுவரை சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல இந்த வைரசால் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சீனா அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…