புதிய படத்திற்காக குதிரை ஏற்றம், தற்காப்பு கலைகளை கற்று வரும் ஹிப் ஹாப் ஆதி.!

Published by
பால முருகன்

புதிய திரைப்படத்திற்காக தற்காப்பு கலை மற்றும் குதிரை சவாரி ஹிப் ஹாப் ஆதி கற்றுக்கொண்டு வருகிறார். 

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் ,நடிகராகவும் வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி. இவர் தற்போது இயக்கி நடித்துள்ள திரைப்படம் “சிவகுமாரின் சபதம்”. நெசவுத்தொழிலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வரும் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து அன்பறிவு என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து ஆதி அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தை குறித்த தகவல் பரவி வருகிறது. இவர் நடிக்கும் அடுத்த படத்திற்கு HHT6-என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு இந்த திரைப்படம் அதிரடி ஆக்க்ஷன் கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றார்கள். இந்த படத்திற்காக ஆதி..தற்காப்பு கலை மற்றும் குதிரை சவாரி கற்று கொண்டுவருவதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் எனவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Published by
பால முருகன்

Recent Posts

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

2 minutes ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

26 minutes ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

16 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

17 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

18 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

18 hours ago