176 பேர் பரிதாப பலி- உண்மையை ஒப்புக்கொண்ட ஈரான் அரசு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான போயிங் ரக விமானம் லாஜ் அபத் என்ற பகுதியில் விழுந்து நொறுங்கியது, அதில் பயணம் செய்த 176 பேரும் பலியானார்கள்.
  • இன்று காலை இரான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மனித தவறுகளின்’ காரணமாக சுட்டு வீழ்த்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8-ம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான போயிங் ரக விமானம் சில நிமிடங்களில் லாஜ் அபத் என்ற பகுதியில் உள்ள விவசாய இடத்தில் விழுந்து நொறுங்கியது. விமானம் தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 176 பேரும் பலியானார்கள்.

இதில் ஈரானியர்கள் 82 பேரும், கனடாவை சேர்ந்த 63 பேரும், உக்ரைனை சேர்ந்த 11 பேரும், சுவீடனை சேர்ந்த 10 பேரும், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 4 பேரும், ஜெர்மனி, இங்கிலாந்தை சேர்ந்த தலா 3 பேரும் உயிரிழந்தனர். பின்னர் விமானத்தின் தொழில்நுட்ப கோளாறால் இச்சம்பவம் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் தான் இந்த விமானம் சிக்கியதாக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குற்றஞ்சாட்டி வந்ததை தொடர்ந்து மறுத்து வந்த இரான், தற்போது முதல் முறையாக உண்மையை ஒப்புக்கொண்டுள்ளது.

இந்நிலையில், விமானத்தை ஏவுகணையால் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அரசு தற்போது ஒப்புக்கொண்டுள்ளது. அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் இன்று காலை இரான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மனித தவறுகளின்’ காரணமாக உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளது ஈரான் அரசு. இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் வழங்க அதிமுக முடிவு.? இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு.!

சென்னை : தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவைத் தேர்தலில்…

11 minutes ago

நாளை திமுக பொதுக்குழுக் கூட்டம்.! இன்று மாலை பிரமாண்ட ரோடு ஷோ நடத்தும் மு.க.ஸ்டாலின்.!

மதுரை : ஜூன் 1-ஆம் நாள் மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. கடந்த மே3 ம்…

29 minutes ago

கடைசி வரை திக்..திக்.. குஜராத்துக்கு குட் பை! த்ரில் வெற்றிபெற்ற மும்பை!

நியூ சண்டிகர் : இன்று நியூ சண்டிகர் மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில்…

8 hours ago

ஐயோ என்னங்க இதெல்லாம்? நடிகையின் குளியல் நீரில் சோப்…விலை எவ்வளவு தெரியுமா?

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை சிட்னி ஸ்வீனி, தனது குளியல் நீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சோப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி தலைப்பு…

9 hours ago

என்னா அடி! குஜராத்தை குமுற வைத்த மும்பை….வெற்றிக்கு வைத்த பிரமாண்ட டார்கெட்!

நியூ சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஏற்கனவே, பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டது.…

10 hours ago

திருநெல்வேலி, கோவை …நாளை இந்த மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : இன்று (மே 30) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய…

11 hours ago