ஐஸ்வர்யா ராஜேஷ் பட இயக்குநருடன் இணையும் பிக்பாஸ் பிரபலம்.!

Published by
Ragi

ரைசா வில்சன் அடுத்ததாக கார்த்திக் ராஜூ இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 மூலம் பிரபலமானவர் தான் ரைசா. அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் தேடி வந்தது. அதன் பின்னர் அதே பிக்பாஸ் 1 மூலம் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிறேமா காதல் என்ற படத்தில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

தற்போதும், அவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.ஆலிஸ், காதலிக்க யாருமில்லை, FIR, ஹஷ்டாக் லவ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் அடுத்ததாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் தினேஷ் நடித்த ‘திருடன் போலீஸ்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கார்த்திக் ராஜூ இயக்கும் படத்தில் ரைசா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தை ஆர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஆப்பிள் ஜூஸ் ஸ்டுடியோ தயாரிக்கவுள்ளது. தற்போது கார்த்திக் ராஜூ ரெஜினா கெசன்ட்ரா நடிக்கும் ‘சூர்ப்பனகை’ என்ற படத்தை இயக்குவது குறிப்பிடத்தக்கது. விரைவில் ரைசாவின் அடுத்த படத்தினை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Ragi

Recent Posts

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

8 minutes ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

21 minutes ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

1 hour ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

4 hours ago