தமிழில் உருவாக்கும் அனிமல் திரில்லர்.. தி நைட் கதையை கூறிய தயாரிப்பாளர்..!

Published by
பால முருகன்

சாக்ஷி அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள தி நைட் படத்தின் கதையை தயாரிப்பாளர் கலசா ஜே.செல்வம் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சாக்ஷி அகர்வால் தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் , ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.அந்த வகையில் இவர் தற்போது ’சின்ட்ரெல்லா’ ’ஆயிரம் ஜென்மங்கள்’ ’டெடி’, ’அரண்மனை 3’ ’புரவி’ ஆகிய படங்களில் நடித்து வருவதுடன் ‘தி நைட்’ என்ற திரில்லர் பாணியில் உருவாகும் படத்திலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தினை ரங்கா புவனேஸ்வர் என்பவர் இயக்க ,அன்வர் கான் தாரிக் என்பவர் இசையமைக்க உள்ளார்.மேலும் இந்த படத்தில் சாக்ஷிக்கு ஜோடியாக வேத் என்பவர் ஹீரோவாக நடிக்கிறார் . தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்திற்கான படப்பிடிப்பை தொடர்ந்து தி நைட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில்நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்த நிலையில் படத்தை பற்றி படத்தின் தயாரிப்பாளரான கலசா ஜே.செல்வம் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியது, “நான் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விடம் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றினேன் அப்போதிலிருந்து ஹாலிவுட் பாணியில் ஒரு அனிமல் திரில்லர் திரைப்படத்தை இயக்க வேண்டும் என்பது எனக்கு மிகப்பெரிய ஆசையாக இருந்தது. இது தமிழ் சினிமாவின் புதிய முயற்சியாக இருக்கும். சாக்ஸி அகர்வாலும் அவரது காதலரும் காட்டிற்குள் டிராக்கிங் செல்கிறார்கள் அப்போது அவர்கள் விலங்காக மாறிய வில்லனிடம் மாட்டிக்கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் இருவரும் எப்படி தப்பித்து வருகிறார்கள் என்பதே கதை என்றும் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்
Tags: the night

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

5 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

7 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

7 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

8 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

10 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago