அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நேற்று முதல் ரஷ்யாவில் அனைத்து தயாரிப்பு மற்றும் விற்பனையையும் நிறுத்தியுள்ளது.
உக்ரைனுக்கும் ,ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போர் இன்னும் ஓயவில்லை. ஒவ்வொரு நாளும் தாக்கல் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், உலகின் பல நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நேற்று முதல் ரஷ்யாவில் அனைத்து தயாரிப்பு மற்றும் விற்பனையையும் நிறுத்தியுள்ளது.
ஆப்பிள் வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யாவில் எங்கள் விற்பனையை அனைத்தையும் நாங்கள் நிறுத்திவிட்டோம். இனி ரஷ்யாவில் உள்ள Apple App Store இல் இருந்து எதையும் பதிவிறக்கம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல நாடுகள் உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை கண்டித்து பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ரஷ்யாவை எதிர்த்துப் போரிட உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கவும் இந்த நாடுகள் உறுதியளித்துள்ளன.
ஐ.நா கூற்றுப்படி, உக்ரைனுக்கும், ரஷ்யாவிற்கும் இடையே நடந்து வரும் சண்டைகள் காரணமாக இதுவரை 500,000 க்கும் அதிகமான மக்களை நாட்டை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 28 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் அவசர அமர்வில் பேசிய ஐநாவுக்கான ரஷ்யாவின் நிரந்தரப் பிரதிநிதி வசிலி நெபென்சியா, உக்ரைனை இணைக்கும் திட்டம் ரஷ்யாவிடம் இல்லை என்று கூறினார்.
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…