ரஷ்யாவில் விற்பனையை நிறுத்திய ஆப்பிள் நிறுவனம்..!

Published by
murugan

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நேற்று  முதல் ரஷ்யாவில் அனைத்து தயாரிப்பு மற்றும்  விற்பனையையும் நிறுத்தியுள்ளது. 

உக்ரைனுக்கும் ,ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போர் இன்னும் ஓயவில்லை. ஒவ்வொரு நாளும் தாக்கல் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், உலகின் பல நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நேற்று  முதல் ரஷ்யாவில் அனைத்து தயாரிப்பு மற்றும்  விற்பனையையும் நிறுத்தியுள்ளது.

ஆப்பிள்  வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யாவில் எங்கள் விற்பனையை அனைத்தையும் நாங்கள் நிறுத்திவிட்டோம். இனி ரஷ்யாவில் உள்ள Apple App Store இல் இருந்து எதையும் பதிவிறக்கம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல நாடுகள் உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை கண்டித்து பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ரஷ்யாவை எதிர்த்துப் போரிட உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கவும் இந்த நாடுகள் உறுதியளித்துள்ளன.

ஐ.நா கூற்றுப்படி, உக்ரைனுக்கும், ரஷ்யாவிற்கும் இடையே நடந்து வரும் சண்டைகள் காரணமாக  இதுவரை 500,000 க்கும் அதிகமான மக்களை நாட்டை விட்டு வெளியேறியதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 28 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் அவசர அமர்வில் பேசிய ஐநாவுக்கான ரஷ்யாவின் நிரந்தரப் பிரதிநிதி வசிலி நெபென்சியா, உக்ரைனை இணைக்கும் திட்டம் ரஷ்யாவிடம் இல்லை என்று கூறினார்.

Recent Posts

காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை! உதவி எண்கள் இதோ…

காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை! உதவி எண்கள் இதோ…

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…

5 minutes ago

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதனால் இரு நாட்டு…

2 hours ago

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

4 hours ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

4 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

12 hours ago