அருண் விஜய்யின் ‘பாக்ஸர்’ படத்தினை குறித்த முக்கிய அறிவிப்பு இன்று.! சர்ச்சையை ஏற்படுத்திய அருண்விஜய் பதிவு.!

Published by
Ragi

அருண் விஜய் நடிக்க உள்ள பாக்ஸர் என்னும் திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5மணிக்கு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அறிவிப்பில் படக்குழுவினர் மீது கோவமாகவே உள்ளார் என்று தெரிகிறது.

அருண் விஜய், கடைசியாக கார்த்திக் நரேனின் மாபியா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர் நடிக்க இருப்பதோடு வா டீல் என்ற படமும், அக்னி சிறகுகள், சினம், ஜிந்தாபாத் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். இதற்கு முன்பெல்லாம் பாக்ஸர் என்னும் திரைப்படத்தில் கமிட்டாகி அதன் பூஜையும் நடைப்பெற்றது. ஆனால் இதன் படப்பிடிப்பு திட்டமிட்டப்படி தொடங்கப்பட வில்லை. அறிமுக இயக்குனரான விவேக் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் பேனரின் கீழ் மதியழகன் தயாரிக்கிறார். டி. இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரித்திகாசிங் நடிக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்காக அருண் விஜய் வெளிநாடுகளில் சென்று தற்காப்பு கலைகளை கற்றுக் கொண்டார்.

சமீபத்தில் அருண் விஜய் அளித்த பேட்டியில், தயாரிப்பு தரப்பில் இருந்து ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே படம் தொடங்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு பாக்ஸர் படத்தினை குறித்த முக்கிய அறிவிப்பை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஹேமா ருக்மணி வெளியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனையடுத்து அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் சிறிய பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் நீங்கள் எல்லோரும் பாக்ஸர் படத்தினை குறித்து கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதற்காக உங்களை போலவே நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இந்த படத்திற்காக என்னை தயார்ப்படுத்தி கொள்ள கடினமாக உழைத்து வந்தேன். ஆனால் இன்னும் முழு அளவிலான படப்பிடிப்பை தொடங்கவில்லை. இந்த திரைப்படத்திற்கு உடல் மற்றும் மனதளவில் அதிக முயற்சியும், உழைப்பும் தேவை என்பதால், அது சரியான காலகட்டத்தில் வேலை செய்யப்பட வேண்டும். அது தயாரிப்பு நிறுவனத்தின் தெளிவான அறிவிப்பால் மட்டுமே சாத்தியமாகும். எனவே எனது தரப்பில் இருந்து இந்த படத்தினை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருங்கள் என்று கூறியுள்ளார்.இதிலிருந்து பாக்ஸர் படக்குழுவினர் மீது அருண்விஜய் சற்று கோவமாகவே உள்ளார் என்று தெரிகிறது. இருப்பினும் இந்த படத்தினை குறித்த முக்கிய அறிவிப்பிற்காக அருண் விஜய்யின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Published by
Ragi

Recent Posts

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

25 minutes ago

இங்கிலாந்தில் எத்தனை சதம் வச்சிருக்க? சீண்டிய ஜானி பேர்ஸ்டோவ்…பதிலடி கொடுத்த கில்!

லீட்ஸ் : இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இந்திய…

47 minutes ago

“ஆங்கிலம் முன்னேற்றத்திற்கான உலகளாவிய கருவி” – அன்பில் மகேஸ்.!

சென்னை : ஆங்கிலம் பேசுபவர் வெட்கபட வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…

53 minutes ago

இஸ்ரேல் உளவு சேவைகளுடன் தொடர்பு.., ஈரானில் 22 பேர் கைது.!

ஈரான் : கடந்த ஜூன் 13 முதல், இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

1 hour ago

”அனைவரும் யோகாசனம் செய்வோம்” – அண்ணாமலை அழைப்பு.!

சென்னை : சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர…

1 hour ago

எடப்பாடி பேசுவதை பார்த்து கவலைப்பட வேண்டாம்! பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு!

சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அரசியலுக்கான வேலையில்…

2 hours ago