பேங்க் ஆஃப் பரோடா வாட்ஸ்அப் மூலம் வங்கி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையை அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் அல்லாதவர்களும் பெறலாம்.
பேங்க் ஆஃப் பரோடா வாட்ஸ்அப் மூலம் வங்கி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையை அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் அல்லாதவர்களும் பெறலாம். வாட்ஸ்அப்பில் வங்கி வசதியை செயல்படுத்த உங்கள் தொலைபேசியில் பாங்க் ஆஃப் பரோடா வாட்ஸ்அப் எண்ணை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். வங்கியின் வாட்ஸ்அப் எண் ’84 33 88 87 77′ இந்த வாட்ஸ்அப் வங்கி சேவையின் மூலம் இருப்பு விசாரணை, மினி ஸ்டேட்மெண்ட், காசோலை நிலை விசாரணை, காசோலை புத்தக கோரிக்கை, டெபிட் கார்டை தடுப்பது, வங்கியின் தயாரிப்பு மற்றும் சேவைகள் குறித்த தகவல்கள் டிஜிட்டல் தயாரிப்புகளுக்கு பதிவு செய்தல் அல்லது விண்ணப்பித்தல் போன்றவற்றை இந்த வங்கி சேவை வழங்கும்.
இதுகுறித்து இதன் இயக்குனரான குரானா கூறுகையில், ‘சமீபத்திய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எளிய மற்றும் புதுமையான வங்கி தீர்வுகளை மேம்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். சமூக ஊடகங்களின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதால், வாட்ஸ்அப் வங்கி, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வங்கி தேவைகளை பூர்த்தி செய்ய ஏராளமான வசதிகளை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த வங்கி சேவையானது எளிதான அணுகல் மற்றும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வசதிகளுக்கும் பயன்படும்.
ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் இரண்டிற்கும் வங்கி சேவை கிடைக்கிறது. வங்கி தொடர்பான எந்த ஒரு கேள்விகளுக்கும், பரோடா வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களும் அணுகலாம். உங்கள் வாட்ஸ் அப்பில் பேங்க் ஆஃப் பரோடா வங்கி சேவைகளை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள்.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…