அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரானிய தளபதியின் உடல் இறுதி ஊர்வலம்!

Published by
Sulai
  • அமெரிக்காவின் தாக்குதலால் கொல்லப்பட்ட ஈரானிய தளபதி உடல் இறுதி ஊர்வலம் சென்றுள்ளது.இந்த ஊர்வலத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துள்ளனர்.
  • ஈரானிய தளபதியின் உடல் அவரது சொந்த ஊரான கெர்மனில் அடக்கம் செய்யப்படும் என்று ஈரானிய தூதர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் தூதரகத்தை ஈரான் படை வீரர்கள் தாக்கியதன் காரணமாக டொனால்ட் டிரம்ப் ,ஈரான் இதற்கு மிகப்பெரிய விலை கொடுக்கவேண்டியிருக்கும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அமெரிக்க படைகள் தயாராக இருக்குமாறு உத்தரவு விடப்பட்டிருந்தது.

இதன் காரணமாக அமெரிக்க படைகள் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் நடத்திய தாக்குதலில் ஈரானின் தளபதி ஜெனரல் சுலைமானி மற்றும் அபு மஹ்தி அல் முஹாண்டிஸ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கொல்லப்பட்ட இருவரின் இறுதி ஊர்வலம் ஈராக்கிய நகரமான காஸ்மெனியில் சனிக்கிழமை காலை தொடங்கியது.இந்த இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் ஈராக்கிற்கான ஈரானிய தூதர் மஸ்ஜெடி கூறுகையில் தியாகிகளின் துக்க அனுசரிப்பை நடத்த காஸ்மெயினில் உள்ள ஷியா இமாம்களின் புனித ஆலயங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் அவர் இறுதி ஊர்வலத்திற்கு பின்னர் ஈராக் தலைநகரான பாக்தாதிற்கு சடலங்கள் கொண்டு செல்லப்படும் என்றும் தளபதி சுலைமானியின் உடல் திங்களன்று ஈரானுக்கு கொண்டுசெல்லப்பட்டு அவரது சொந்த ஊரான கெர்மனில் அடக்கம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

17 minutes ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

2 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

2 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago