சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘தும்பி துள்ளல்’ என்ற பாடல் இன்று மாலை 5மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இதில் விக்ரம் ஏழு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை அஜய் ஞானமுத்து இயக்கி ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் நடிக்கிறார்.மேலும் வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
கொரோனா வைரஸ் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் படப்பிடிப்புகள் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இந்த படத்தினை குறித்த அப்டேட் தான். இந்த நிலையில் தற்போது இந்த படத்தினை குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதாவது கோப்ரா படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘தும்பி துள்ளல்’ பாடலை இன்று மாலை 5மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவேக் மற்றும் ஜிதின் ராஜ் வரிகள் எழுத ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்க ஸ்ரேயா கோஷால் மற்றும் நகுல் அபயங்கர் பாடியுள்ளனர். தற்போது இந்த பாடலிருந்து சில ஸ்டில்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…