சோமாலிய நாட்டில் உள்ள தலைநகர் மொகடிசுவில் இன்று காலை நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் 90 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பெரும்பாலானோர் மாணவர்கள். படுகாயம் அடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல் அரசின் வரி அலுவலகத்தை இலக்காக வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ,சோதனை சாவடியில் கார்களை பரிசோதனை செய்யும்போது திடீரென கார் ஒன்றில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு அரசியல்வாதிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் தூதர்கள் தங்கி இருந்த தாக்குதல் நடத்தப்பட்டது அந்த தாக்குதலை அல்-ஷபாப் ஜிகாதி பயங்கரவாத அமைப்பு நடத்தியதாக கூறியது.இந்த தாக்குதலில் 5 இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…