மாஸ்டர் படத்தில் குறைவான நேரம் மட்டுமே நடித்துள்ளதாக கிண்டலடித்த ரசிகர்களுக்கு சாந்தனு சிறப்பான பதிலடி கொடுத்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி பொங்கலுக்கு வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதியும், ஜோடியாக நடிகை மாளவிகா மோகனனும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர, இந்த படத்தில் நடிகர் சாந்தனு, விஜய் டிவியின் பிரபலம் தீனா படத்தில் ஒரு சிறிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்கள் நடிப்பு குறித்து அவர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிடும் பொழுது பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர்.
ரசிகர் ஒருவர் மாஸ்டர் படத்தில் பூனை அளவுக்கு கூட உங்களது காட்சி இல்லை ஊறுகாய் மாதிரி கூட பயன்படுத்தப்படாத நீங்கள் ஏன் இவ்வளவு பில்டப் போடுகிறீர்கள் என சாந்தனுவை பார்த்து கிண்டல் செய்து ஒரு கமெண்ட் ஒன்றை பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த சாந்தனு கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கணக்கில், ஒரு காட்சியோ ஒரு படமோ அதுவே ஒரு சாதனைதான் என்று பதில் கொடுத்துள்ளார். அதேபோலதான் விஜய் டிவி தீனாவை பார்த்து ரசிகர் ஒருவர் 9 செகண்ட் கூட படத்தில் கட்டப்படவில்லை. அதற்கு ஏன் இவ்வளவு பில்டப் என கேட்டதற்கு அந்த ஒன்பது செக்கென்ட படத்தில் வர நான் ஒன்பது வருடங்கள் உழைத்து இருக்கிறேன் என பதிலளித்திருந்தார். உழைத்து முன்னேறும் அவர்களை பார்த்து கிண்டல் அடிப்பதை நிறுத்திவிட்டு நமது வாழ்க்கையில் உயர்வதற்கு முயல்வதே நல்ல மனிதனுக்கு அழகு.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…