சீனா, தனது முதல் கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதலை சினோபார்ம் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
உலகளவில் கொரோனா பரவல் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி தற்பொழுது பிரிட்டனில் ஃபைசர் தடுப்பூசியும், அமெரிக்காவில் மார்டனா கொரோனா தடுப்பூசி அனுமதி வழங்கி, இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது.
அந்தவகையில், சீன அரசுக்கு சொந்தமான சினோபார்ம் நிறுவனம், கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. சினோபார்ம் நிறுவனம், 2 பிரிவுகள் தனித்தனியாக 2 தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது. இதில் பெய்ஜிங்கில் தயாரிக்கப்பட்டு வந்த தடுப்பூசி, 86 சதவீதம் கொரோனாக்கு எதிராக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சினோபார்ம் நிறுவனத்தின் உகான் நகரில் தயாரிக்கப்படும் மற்றொரு தடுப்பூசி இறுதிக்கட்ட பரிசோதனையை நிறைவு செய்துள்ளது. இதனால் இன்னும் சில நாட்களில் இந்த தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் வழங்கவுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் சீனா, தனது முதல் கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதலை சினோபார்ம் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இதனால் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வருமாறு கூறப்படுகிறது. அதன்படி, இந்த தடுப்பு மருந்து முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்தி ஐக்கிய அரபு அமீரகம் ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது, குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…