கடந்த இரு ஆண்டுகளாக வர்த்தக போரில் ஈடுபட்டு வந்த நாடுகள் தான் அமெரிக்காவும், சீனாவும்.! இரு நாடுகளுமே எதெரெதிர் நாடுகளிலிருந்து வரும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து தங்கள் எதிர்ப்பை காட்டி வந்தனர்.
இதனை அடுத்து இரு நாடுகளும் தங்களுக்கிடையிலான கசப்புணர்வுகளை மறந்து கடந்த ஜனவரி மாதம் ஒரு வர்த்தகத்தின் முதல்கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதனடிப்படையில், அமெரிக்காவிடம் இருந்து 20 ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ள பொருட்களை சீனா வாங்க வேண்டும்.
இதற்கிடையே, கொரோனா வைரஸ் காரணமாக, உலக பொருளாதாரமே ஆட்டம் கண்டுள்ளது. இதுபோன்ற எதிர்பாராத சம்பவங்களோ, இயற்கை சீற்றங்களோ நடக்கும்போது, அதற்கேற்ப மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று ஒப்பந்தத்தில் ஒரு விதிமுறை உள்ளது.
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, உலக பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோல, இயற்கை சீற்றங்கள் போன்ற எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறும்போது, அதனை காரணம் கூறி மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தலாம் என்கிற ஒரு விதிமுறை உள்ளது. தற்போது, இந்த விதிமுறையை சீனா பயன்படுத்தக்கூடும் என் அமெரிக்க-சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஆய்வு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்த பத்திரிக்கையாளர் கேள்விக்கு பதிலளித்த, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனா அந்த குறிப்பிட்ட விதியை பயன்படுத்தினால், அந்நாட்டுடனான வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவேன். அப்போது, சீனாவிடம் என்னை விட கடுமையாக நடந்து கொள்பவரை நீங்கள் வேறெங்கும் பார்க்க முடியாது. அந்தளவிற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுப்பேன்.’ என்பது போல கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…