சீனாவின் கரோனோவேக் தடுப்பூசி 3 முதல் 17 வயதுடையவர்களுக்கு பாதுகாப்பானதாகவும் நல்ல பலன் அளிக்கக்கூடியதாகவும் உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லான்சன் தொற்று நோய் இதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள கரோனோவேக் தடுப்பூசியை 550 பேருக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு 96% பலன் கிடைத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இது குழந்தைகளுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசியை முதல் கட்டமாக 1.5 மைக்ரோகிராம் அளவும், 3 மைக்ரோகிராம் அளவிலும் செலுத்தியுள்ளனர். இதில் 3 மைக்ரோகிராம் அளவு செலுத்தப்பட்டவர்களுக்கு 100% பலனளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.5 மைக்ரோகிராம் அளவு செலுத்தப்பட்டவர்களுக்கு 97% பலன் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்பவர்களுக்கு செலுத்திக்கொள்ளும் இடத்தில் சிறு வலி மட்டும் ஏற்படுவதாகவும், மிதமான விளைவுகள் மட்டுமே இதனால் ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரர்…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…