2021-க்கு முன்பு கொரோனா தடுப்பு மருந்து கிடைக்காது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்த கொரோனா வைரஸால், உலகளவில், 15,374,394 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 630,211 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் செயல் இயக்குனர், மைக் ரயான் அவர்கள் கூறுகையில், கொரோனா தடுப்பு மருந்தை 2021-ம் ஆண்டுக்கு முன் எதிர்பார்க்க முடியாது என்றும், பல்வேறு நாடுகளில் தடுப்பு மருந்து சோதனை முழுவீச்சில் நடைபெறுவதாகவும், பல தடுப்பு மருந்துகள் 3-ம் கட்ட பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பொருளாதாரத்தை சார்ந்து இல்லாமல், தேவையை பொறுத்து தடுப்பூசி விநியோகத்தை உறுதிசெய்ய செயல்பட்டு வருவதாகவும், தடுப்பூசி கிடைக்கும் வரையில் நோய்தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…
லீட்ஸ் : இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இந்திய…
சென்னை : ஆங்கிலம் பேசுபவர் வெட்கபட வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…
ஈரான் : கடந்த ஜூன் 13 முதல், இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
சென்னை : சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர…
சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அரசியலுக்கான வேலையில்…