கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் சீன அரசு மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது என சீன அதிபர் பெருமிதம்…

Published by
Kaliraj
உயிர்கொல்லி கொடிய கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி தற்போது மீண்டுள்ள  சீனவில்  நடைபெறும் நாடாளுமன்றத்தின் வருடாந்திர கூட்டத்தொடர், கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்றின்  கோரத்தாண்டவத்தால், ஒத்திவைக்கப்பட்ட  வைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர், வருகிற 22-ந் தேதி தொடங்குவதாக தற்போது  அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதையொட்டி, ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய சீன  அதிபர் ஜின்பிங் கூறியதாவது,  கொடிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாடு முழுவதும் நடந்த போரில், சீனா மிகப்பெரிய போர்த்திற சாதனையை  படைத்துள்ளது என்றும்,  சீனாவின் இந்த கடின முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்றும் எனினும் வூகான் நகரம் அடங்கிய ஹுபெய் மாகாணத்தில் சமுதாய பரவல் நிலையை எட்டிவிடாமல் தடுப்பதற்கான தற்போது மேலும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். ரஷியாவை ஒட்டிய ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில், ரஷியாவில் இருந்து திரும்பிய சீனர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. அங்கும் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். வர்த்தக நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டும். சிறு, குறு தொழில்களுக்கு புத்துயிரூட்ட வேண்டும். வாகன உற்பத்தி தொழில்கள், மின்னணு பொருட்கள் உற்பத்தி தொழில்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும்,  சீனாவில், வேளாண் உற்பத்தியை ஊக்குவித்து, விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும்,  கஷ்டப்பட்டு படைத்த சாதனைகளை பாதுகாக்கும்வகையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளில் எந்த தளர்வும் இருக்கக்கூடாது என்று  சீன அதிபர்  ஜின்பிங் அந்த சீன கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் பேசினார்.

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

56 minutes ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

2 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

3 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

3 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

4 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

4 hours ago