அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் ஓப்பனிங் பாடலிற்கு நடன ஆசிரியராக தினேஷ் மாஸ்டர் பணியாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தில் ஹூமா குரேஷூ நாயகியாகவும் ,கார்த்திகேயா வில்லனாகவும், அம்மாவாக நடிகை சுமித்ராவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் யோகி பாபு,பேர்லி மன்னி,குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் முடிவடையும் என்றும் , ஒரு ஸ்டண்ட் காட்சி மட்டும் படமாக்கப்பட உள்ளதாகவும்,விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கவுள்ளதாகவும், படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்துள்ளதாகவும் போனி கபூர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வலிமை படத்தின் முதல் பாடல் முடித்துள்ளதாகவும் அந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளதாகவும், இந்த பாடலுக்காக ஒரிசாவில் ட்ரம்ஸ் வாசிக்கும் கலைஞர்களை பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அந்த பாடலுக்கு நடன ஆசிரியராக தினேஷ் மாஸ்டர் பணியாற்றியுள்ளதாகவும், அந்த பாடல் ஷுட் செய்து முடித்தவுடன் நடிகர் அஜித் அருமை என்றும் கூறிஉள்ளர்த்தஹகி தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இன்னும் மூன்று நாட்களில் வலிமை படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…