ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு;காவல் அதிகாரிக்கு 22.6 ஆண்டுகள் சிறைத்தண்டனை…!

Published by
Edison

ஜார்ஜ் பிளாய்டை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரி டெரெக் சாவினுக்கு 22 ஆண்டுகள் 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு மே 25 ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் (வயது 48) என்ற கறுப்பினத்தவர், கள்ள நோட்டு வைத்திருந்ததாக கூறி அவரது கழுத்தில்  காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் முழங்காலை வைத்து அழுத்தினார்.இதனால் மூச்சுவிட முடியவில்லை என்று பிளாய்ட் கெஞ்சியும் அதிகாரி தனது காலை எடுக்கவில்லை.இதன்காரணமாக,மூச்சுத்திணறி பிளாய்ட் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து,காவல்துறை அதிகாரி இனவெறியுடன் நடந்து கொண்டதாக பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்,பல பகுதிகளில் போராட்டம் வெடித்தது.

இதனைத் தொடர்ந்து,ஜார்ஜ் ஃபிளாய்ட் குடும்பத்தினர்,காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் உட்பட நான்கு பேர் மீது வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில்,இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க மினசோட்டா நீதிபதி பீட்டர் காஹில்,”ஜார்ஜ் ஃபிலாய்டின் கொலைக்காக காவல்துறை அதிகாரி டெரெக் சாவினுக்கு 22 ஆண்டுகள் மற்றும் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக,நீதிபதி கூறுகையில்:”இந்த தண்டனை உணர்ச்சி அல்லது பொதுக் கருத்தின் அடிப்படையில் அமைந்ததல்ல.ஃபிலாய்ட் குடும்பத்தினர் உணரும் ஆழ்ந்த மற்றும் மிகுந்த வேதனை புரிகிறது. அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிகாரி சாவின் தனது நம்பிக்கை,அதிகாரத்தின் நிலையை துஷ்பிரயோகம் செய்தார் மற்றும் பிளாய்டை கொடுமையுடனும், மரியாதை இல்லாமலும் நடத்தினார், மேலும் எல்லா மனிதர்களுக்கும் கொடுக்க வேண்டிய கண்ணியத்தை அவருக்கு கொடுக்க மறுத்தார்.

எனவே,கொலை குற்றமும், பிற குற்றங்களும் சுமத்தப்பட்ட சாவின் தனது வாழ்நாள் முழுவதும் துப்பாக்கியை வைத்திருப்பதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும்,45 வயதான சாவின் சிறையில் கண்ணியமாக நடந்து கொண்டால், தனது மூன்றில் இரண்டு பங்கு தண்டனையை அனுபவித்தபின் பரோலில் விடுவிக்கப்படுவார்”,என்று தெரிவித்தார்.

 

Published by
Edison

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

1 hour ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

2 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

2 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

3 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

4 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago