தனக்கு சம்பளம் தராமல் ஏமாற்றியதாக தனுஷ் கூறியது யாரை?

Default Image

இரண்டு நாள் முன்னர் தனுஷ் நடிப்பில் உருவான அசுரன் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் தனுஷ் தான் வெளியாட்களிடம் உஷாராக இருப்பேன். எனவும் தெரிந்தவர்களிடம் அப்படி இருப்பதில்லை அதனால் தன்னை சிலர் ஏமாற்றி உள்ளனர் என பேச்சுவாக்கில் மேடையில் கூறினார், மேலும், தனக்கு சம்பளம் தராமல் ஏமாற்றி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இவருடைய கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்த வண்ணம் உள்ளது. நிலையில் இவர் யார் தனது சம்பளம் தரவில்லை என கூறுகிறார் என ரசிகர்கள் இணையதளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில் ஒரு தரப்பு எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்காக கௌதம் வாசுதேவ் மேனன் கூறிய சம்பளத்தை கொடுக்கவில்லை எனவும் இறுதியாக கொடுப்பதாக கூறிய ஒரு கோடி ரூபாயும் குறைத்து கம்மியாக கொடுத்தார் எனவும் அதனால் தான் என்னை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் சமயத்தில் தனுஷ் இப்படி பேசி உள்ளார் எனவும் கூறி வருகின்றனர்.

தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க லண்டனில் உள்ளார். அவருக்கு இந்த விஷயம் தெரியவந்து அவரே விளக்கம் கொடுக்கும் வரையில் இந்த வதந்திகள் ஓயப்போவதில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts