கேஜிஎப் 3 நிச்சயமாக வரும் ராக்கி பாய் இருப்பார்! அதிரடி அப்டேட் விட்ட பிரசாந்த் நீல்!

Published by
பால முருகன்

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படங்கள் கேஜிஎப் 1 மற்றும் கேஜிஎப் 2 ஆகிய படங்களை சொல்லலாம். இதில் கேஜிஎப் 1  திரைப்படம் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியானது. படம் அருமையாக இருந்த காரணத்தால் படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த முதல் பாகம் உலகம் முழுவதும் 300 கோடி வசூல் செய்ததிருந்தது. முதல் பாகத்தின் வரவேற்பை தொடர்ந்து படத்திற்கான இரண்டாவது பாகமும் உருவாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு இரண்டாவது பாகம் முதல் பாகத்தை விட பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இரண்டாவது பாகத்தின் மீது பெரிய எதிர்பார்புகளே இருந்தது.

இந்த இரண்டாவது பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கேஜிஎப் 2 திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு படம் இருந்த காரணத்தால் படம் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆனது. உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

என்னால் முடிந்தது 2 லட்சம்…200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 நிதியுதவி செய்த KPY பாலா.!

இரண்டாவது பாகம் முடியும் கடைசி காட்சியிலேயே படத்தின் மூன்றாவது பாகம் உருவாகும் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன் பிறகு அந்த படம் குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக பிரபாஸ் வைத்து சலார் படத்தை இயக்க சென்று சலார் படத்தையும் இயக்கி முடித்துவிட்டார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு பிரசாந்த் நீல் ஜூனியர் என்டிஆர் வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்த திரைப்படத்தை இயக்கி முடித்த பிறகு கேஜிஎப் 3 படத்தை தொடங்குவார் என கூறப்படுகிறது. இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரசாந்த் நீல் ” கேஜிஎப் 3 திரைப்படம் நிச்சியமாகி வரும். கண்டிப்பாக அந்த மூன்றாவது பாகத்தில் யாஷ் நடிப்பார்.

நான் தற்போது ஜூனியர் என்டிஆர் படத்தை வைத்து இயக்கி வருகிறேன். அந்த திரைப்படத்தை இயக்கி முடித்த பிறகு  நான் கேஜிஎப் 3 படத்தை இயக்குவேன்” எனவும் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார். மேலும் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள சலார் திரைப்படம் வரும் டிசம்பர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

1 hour ago

இங்கிலாந்தில் எத்தனை சதம் வச்சிருக்க? சீண்டிய ஜானி பேர்ஸ்டோவ்…பதிலடி கொடுத்த கில்!

லீட்ஸ் : இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இந்திய…

1 hour ago

“ஆங்கிலம் முன்னேற்றத்திற்கான உலகளாவிய கருவி” – அன்பில் மகேஸ்.!

சென்னை : ஆங்கிலம் பேசுபவர் வெட்கபட வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…

1 hour ago

இஸ்ரேல் உளவு சேவைகளுடன் தொடர்பு.., ஈரானில் 22 பேர் கைது.!

ஈரான் : கடந்த ஜூன் 13 முதல், இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

2 hours ago

”அனைவரும் யோகாசனம் செய்வோம்” – அண்ணாமலை அழைப்பு.!

சென்னை : சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர…

2 hours ago

எடப்பாடி பேசுவதை பார்த்து கவலைப்பட வேண்டாம்! பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு!

சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அரசியலுக்கான வேலையில்…

2 hours ago