தகுதிநீக்க தீர்மானம்.. டிரம்ப் மீது வரும் 8 ஆம் தேதி விசாரணை!

Published by
Surya

டிரம்ப் மீதான தகுதி நீக்க தீர்மானம், செனட் சபைக்கு நாளை மறுநாள் அனுப்பப்படவுள்ளதால்,டிரம்ப் மீதான விசாரணை, வரும் பிப்ரவரி 8-ம் தேதி தொடங்கவுள்ளது.

அமெரிக்கா அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 46 வது அதிபராக அதிபராக ஜோ பைடன் கடந்த 20 ஆம் தேதி பதவியேற்றார். இந்த தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக வந்த நிலையில், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். மேலும், பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிக்க நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம், கடந்த 6-ம் தேதி நடைபெற்றது.

அப்பொழுது டிரம்ப் ஆதரவாளர்கள், தாக்குதல் நடத்தி, வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்டோரை அமெரிக்க புலனாய்வு போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தினார்கள். இந்த வன்முறைக்கு டிரம்பின் பேச்சுக்களே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டத்தை தொடர்ந்து, அதிபர் பதவியில் இருந்து டிரம்பை நீக்க வேண்டும் என்று ஜனநாயக கட்சியினர் வலியுறுத்திக்கொண்டே வந்தனர்.

அதனைதொடர்ந்து, பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் டிரம்புக்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வந்து, அந்த தீர்மானம் நிறைவேறியது. டிரம்ப் மீதான இந்த தீர்மானம், பாராளுமன்ற மேலவையான செனட் சபையிலும் நிறைவேற்றப்பட வேண்டும். அதன்பின் அந்த தீர்மானத்தின் மீது விசாரணை நடத்தப்படும்.

இந்நிலையில், டிரம்ப் மீதான தகுதி நீக்க தீர்மானம், செனட் சபைக்கு நாளை மறுநாள் அனுப்பப்படவுள்ளது. அதனையடுத்து, தகுதி நீக்க தீர்மானத்தின் மீதான விசாரணை, வரும் பிப்ரவரி 8-ம் தேதி தொடங்குகிறது. இந்த தகுதி நீக்க தீர்மானம் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டால், டிரம்ப் 2 வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Surya

Recent Posts

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்! 

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

42 minutes ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

1 hour ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

2 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

2 hours ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

2 hours ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago