காதல் மிக மிகப் புனிதமானது, மேலும் இது வித்தியாசமானவை உணர்வை கொடுக்கக்கூடிய ஒரு உறவு. காதலர்கள் இருவருக்குமே வித்தியாசமான குணங்கள் இருக்கும். அதிலும் பெண்கள் சில முக்கியமான குணம் கொண்ட ஆண்களை விரும்புவார்கள். ஆனால், அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். குறிப்பாக முக்கியமான நான்கு குணங்களை கொண்ட ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். அது என்ன அந்த நான்கு குணம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
அதாவது எப்பொழுதுமே பெண்கள் தங்கள் விரும்பக்கூடிய ஆண் தனக்கு மட்டுமே சொந்தமானவனாக இருக்க வேண்டும் என விரும்புவது வழக்கம். எனவே, பெண்கள் தன்னை எப்பொழுதும் நேசித்து, பாதுகாப்பாக வைத்திருக்க கூடிய ஒரு நபரைத் தான் விரும்புகிறார்கள். ஏனென்றால் அவ்வாறு அதிக அளவு அன்பு கொண்ட ஆண்கள் தான், இவளை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் எப்பொழுதுமே அக்கறையாக பார்த்துக் கொள்வார்கள். எனவே இப்படிப்பட்ட குணம் கொண்ட ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
அதாவது ஒரு பெண் தான் விரும்பக்கூடிய ஆணுக்கு பெண் தோழிகள் இருந்து, அவர்களை அந்த ஆண் தகப்பன் போல அக்கறையாக கவனித்து கொண்டாலும் பெண்களுக்கு பிடிக்கும். காரணம் என்னவென்றால் யாரோ ஒரு பெண்ணை அவன் நன்றாக பார்த்துக் கொள்ளும் போது நம்மையும் நன்றாக கவனித்துக் கொள்வான் எனும் எண்ணம் தோன்றுவதால் தானாம். இது போன்று பெண் தோழிகளுடன் அக்கறையாக நிதானமாக நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்.
பெண்கள் தங்களது கனவுகளை நிறைவேற்ற வேண்டுமென பெரிதும் முயற்சி செய்வார்கள். ஆனால் அப்படிப்பட்ட கனவுகள் நிறைவேறவில்லை என்னும் பட்சத்தில் அவர்கள் மனமுடைந்து விடுவார்கள். எனவே தான் விரும்பக்கூடிய ஆண் தனது கணவு மற்றும் இலட்சியத்தை புரிந்து கொண்டு தன்னுடன் இணைந்து வாழ்க்கை நடத்த கூடியவராக இருந்தாலும் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். ஒரு பெண் ஏதேனும் தொழில் அல்லது தேர்வுகளில் வெற்றி பெரும் போது பாராட்டும் ஆண்களையும் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
பெண்கள் பல சமயங்களில் புத்திசாலித்தனமான ஆண்களுடன் வாழ்க்கையை செலவிட விரும்புவார்கள். ஏனென்றால் ஆண்களின் பேச்சில் காணப்படக்கூடிய புத்திசாலித்தனத்தால் பெண்கள் ஈர்க்கப்படுவார்கள். அதுமட்டுமல்லாமல அவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை ஏற்படும் பொழுது பெண்ணுடன் சண்டையிடுவதற்கு பதிலாக அவளை புரிந்துகொண்டு நேசிக்கக் கூடிய ஆண்களையும் பெண்கள் அதிகம் நேசிப்பார்கள் என கூறப்படுகிறது.
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…