குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருமே அதிகளவில் தற்பொழுது சாக்ஸ் பயன்படுத்துகிறார்கள். இந்த சாக்ஸை கொஞ்ச நாட்கள் தான் பயன்படுத்த முடிகிறது. பாதங்களில் அதிக நேரம் இருப்பதால் அடிக்கடி இதை மாற்ற வேண்டி உள்ளது அல்லது கிழிந்து விடுகிறது. இது போன்ற கிழிந்த சாக்ஸுகளை, பழைய சாக்ஸுகளை தூக்கி எரிந்து விடுகிறோம். ஆனால், இனி தூக்கி ஏரியாதீர்கள். கிழிந்த சாக்ஸுகளை பல விதமாக நாம் பயன்படுத்தி கொள்ளலாம். அவற்றில் சிலவற்றை இன்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
எவ்வளவு தான் விலை கொடுத்து மாடலாக அழகாக வாங்கினாலும் எண்ணெய் டப்பாவிலுள்ள கசிவுகள் மட்டும் பலருக்கு தீராத பிரச்சனையாக இருக்கும். ஒவ்வொரு முறையும் கையிலெடுக்கும் பொழுது எண்ணெய் கைகளில் ஒட்டி கொள்ளும், சமையல் கட்டிலும் எண்ணெய் பிசுக்கு இருக்கும். ஆனால், இந்த சாக்ஸுகளை கிழிந்த பக்கத்தில் மேலும் கீழுமாக வெட்டி விட்டு, எண்ணெய் டப்பாவுக்கு உரை போல போட்டு வைத்துக்கொண்டால் எண்ணெய் கசிவு இருந்தாலும், கைகளில் எண்ணெய் படாது.
பெண்கள் கைப்பை தான் அதிகளவில் உபயோகிப்பார்கள். கைப்பையில் தனி தனி அறைகளாக பைகள் இருந்தாலும் சில்லறைகள் போட்டு வைக்க ஒரு பர்ஸ் வைத்திருப்போம். இதற்க்கு பதிலாக சாக்ஸுகளின் மேற்புற துளையிலிருந்து உருட்டி அதில் ஒரு பட்டன் போட்டு வைத்துக்கொண்டால் கைபைகளில் சில்லறைகளை போட்டு வைக்க உதவும்.
இளம் பெண்கள் வெளி இடங்களுக்கு செல்லும் பொழுது மாதவிடாய் காலங்களில் உபயோகப்படுத்தும் சானிடரி நாப்கின்கள் கடைகளில் வாங்க கூச்சப்படுவார்கள். இதற்கு பதிலாக நமது கைபைகளில் ஒரு நாப்கின் எப்பொழுதும் வைத்து கொள்வது நல்லது. இது சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதால் சாக்ஸுகளுக்குள் போட்டு வைத்து கொள்ளலாம். பாதுகாப்பாகவும் இருக்கும், பிறர் நமது பைகளை தொட்டாலும் அச்சப்பட வேண்டி இருக்காது.
குழந்தைகள் விளையாடுவதற்காக வெளியில் செல்லும் பொழுது கைகளில் தண்ணீர் பாட்டில்களை கொடுத்து விடுவோம். அப்பொழுது சாக்சின் மேற்புறத்தில் இருபுறமும்ப்லெஸாக துளையிட்டு சுற்றி நூல் வைத்து தைத்தால் குழந்தைகள் கையில் கொண்டு செல்லும் கைப்பை போல உபயோகப்படுத்தலாம். சைக்கிள்களில் செல்லும் குழந்தைகள் தொங்க விட்டு கொண்டு செல்லலாம்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…