ஃபேஸ்புக் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் வியாழனன்று, அதன் சிக்கலான சமூக வலைப்பின்னலுக்கு அப்பாற்பட்ட எதிர்காலத்தை பிரதிநிதித்துவப்படுத்த, தாய் நிறுவனத்தின் பெயர் “மெட்டா” என மாற்றப்படுவதாக அறிவித்தார்.
சமூக ஊடக ஜாம்பவான் இருக்கும் ஃபேஸ்புக் நிறுவனமானது, அதன் மிக மோசமான நெருக்கடியிலிருந்து விடுபட முயல்வதோடு,”மெட்டாவர்ஸ்” என்ற மெய்நிகர் ரியாலிட்டி பதிப்புடன் தொழில்நுட்ப ஜாம்பவான் எனும் புதிய எதிர்காலத்திற்கு இந்த பெயர் மாற்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது பற்றி ஜுக்கர்பெர்க் கூறுகையில் “சமூகப் பிரச்சினைகளுடன் போராடி, மூடிய தளங்களில் வாழ்வதில் இருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம், இப்போது நாம் கற்றுக்கொண்ட அனைத்தையும் எடுத்து அடுத்த அத்தியாயத்தை உருவாக்க உதவுவதற்கான நேரம் இது” என்று வருடாந்திர டெவலப்பர்கள் மாநாட்டின் போது கூறினார்.
“இன்று தொடங்கி, எங்கள் நிறுவனம் இப்போது மெட்டா என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். எங்களின் நோக்கம் அப்படியே உள்ளது, இன்னும் மக்களை ஒன்றிணைப்பது, எங்கள் பயன்பாடுகள் மற்றும் அவர்களின் பிராண்டுகள், அவை மாறவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றின் பெயர் மாற்றமின்றி மெட்டா நிறுவனத்தின் கீழ் செயல்படும் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…