லாபம் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதி மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் பற்றி பேசியுள்ளார்.
மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “லாபம்“. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் அரங்கில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் டி.இமான், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் நடிகர் விஜய் சேதுபதி மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் பற்றிபேசியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் ” இயக்குனர் ஜனநாதனின் இழந்த நிலையில் ஒரு பாவியைப் போல என்னை உணர்கிறேன். எனக்கும் அவருக்கும் உள்ள உறவு தந்தை, மகன் உறவுபோல, அவர் இருக்கும்போது அவரது அருமை புரியவில்லை. அவர் மரணம் மூலம் காலம் கேவலமானது என உணர்கிறேன். முன்பே தெரிந்திருந்தால் அவர்கூட நிறைய நேரம் செலவு செய்திருப்பேன். அவர் ஒரு கதையைத் தொடங்குவார், இடையிலேயே கதையில் பல மாற்றங்களைச் செய்வார். இந்தப் படத்திற்காக நான் சம்பளம் ஏதும் வாங்கவில்லை. என் அப்பா, பாட்டன் செய்த புண்ணியத்தால் இப்படத்தில் நடித்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…