பாகிஸ்தானில் சீன செயலியை தொடர்ந்து.. ‘யூடியூப்’ தடை செய்ய வாய்ப்பு ..?

Published by
murugan

பாகிஸ்தான் உயர்நீதிமன்றத்தில் Shaukat Ali என்பவரின் வழக்கை விசாரிக்கும் போது யூடியூப்பை தடை செய்வதாக உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இந்த வழக்கை நீதிபதிகள் காசி முஹம்மது அமீன், நீதிபதி முஷீர் ஆலம் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

அப்போது, யூடியூபில் ஆபாசமான மற்றும் ஒழுக்கக்கேடு வீடீயோக்கள் பரப்புவதல்ல , ஆனால் யூடியூபில் குற்றம், நீதித்துறை, அரசாங்கம் மற்றும் ஆயுதப்படைகளுக்கு எதிராக மக்களைத் தூண்டுவதற்காக வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன.

இதுபோன்ற கட்டுப்பாடற்ற சமூக ஊடகங்களை பாகிஸ்தான் நீதிபதிகள் கடுமையாக எதிர்த்தனர். கருத்துச் சுதந்திரத்திற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று நீதிபதி அமீன் குறிப்பிட்டார். எங்கள் சம்பளம் மக்களின் பணத்திலிருந்து செலுத்தப்படுகிறது, எங்கள் முடிவுகள் மற்றும் எங்கள் செயல்திறன் குறித்து கேள்விகளை எழுப்ப அவர்களுக்கு உரிமை உண்டு, என்றார். இருப்பினும், பாகிஸ்தான் அரசியலமைப்பு நீதிபதிகளுக்கு தனியுரிமைக்கான உரிமையை வழங்குகிறது.

நீதித்துறையுடன் தொடர்புடையவர்களின் குடும்ப உறுப்பினர்களும் யூடியூப்பால் குறிவைக்கப்படுகிறார்கள் என்று கூறினர். யூடியூப் போன்ற தளங்களில் நீதிபதிகள் கேலி செய்யப்படுகிறார்கள். அவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள். இது தொடர்பாக பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் (பி.டி.ஏ) மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (எஃப்.ஐ.ஏ) என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.

பல நாடுகளில் யூடியூப் தடை செய்யப்பட்டுள்ளது என்று நீதிபதி முஷீர் ஆலம் தெரிவித்தார். இதற்கு முன்னர் பல்வேறு சமூக ஊடக தளங்களும், வலைத்தளங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பாகிஸ்தானில் யூடியூப்பை தடைசெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் ஆபாசத்தை பரப்புவதாகக் குற்றம் சாட்டி, சீன செயலியான பிகோ(bigo)வை தடைசெய்தது. மேலும், டிக்டோக்கை எச்சரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

24 minutes ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

2 hours ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

2 hours ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

3 hours ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

4 hours ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

5 hours ago