அவன் இவன் படத்தில் சிங்கம்பட்டி ஜமீனை அவதூறு படுத்தியதாக வழக்கு. இயக்குனர் பாலா விடுவிப்பு.
இயக்குனர் பாலா இயக்கத்தில் கடந்த 2011- ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவன் இவன். இந்த படத்தில் விஷால்- ஆர்யா இணைந்து நடித்திருந்தனர். படத்தில் ஜமீன்தார் வகை வாரிசாக ஹைனஸ் என்ற ஜமீன்தார் தீர்த்தபதி கதாப்பாத்திரத்தில் நடிகர் ஜி.எம்.குமார் நடித்திருந்தார்.
இப்படத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவில் பற்றியும், சிங்கம்பட்டி ஜமீன்தார் பற்றியும் அவதூறாக சித்தரிக்கப்பட்டதாக இயக்குனர் பாலா மீது வழக்கு தொடரப்பட்டது. நடிகர் ஆர்யா தரப்பில் கடந்த மார்ச் மாதம் படத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்கு மன்னிப்பு கோரியதால் வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால், இயக்குனர் பாலா ஆஜராகியும் வழக்கு விசாரணை தொடர்ந்து அம்பை கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
மேலும், இன்று மீண்டும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் குற்றத்தை முறையாக நிரூபணம் செய்யாததால், இயக்குனர் பாலா வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…