இன்றைய தலைப்புச் செய்திகள்.! வெளியூர் முதல் உள்ளூர் வரை.!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியது. 

  • உலகளவில் கொரோனா வைரசால் பதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,085,666 பேர் ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 329,736 பேர் ஆகவும் உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைத்தவர்கள் எண்ணிக்கை 2,021,673 ஆக அதிகரித்துள்ளது. மேலும் படிக்க..
  • இந்தியாவில் 112,028 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,434 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸில் இருந்து 45,422 பேர் குணமாகி வீடு திரும்பியும் உள்ளனர். மேலும் படிக்க..
  • உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கும் என விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தகவல். மேலும் படிக்க..
  • நேற்று மாலை கரையை கடந்த அம்பன் புயலால் பல சேதங்கள் ஏற்பட்டுள்ள  நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த புயலால் இதுவரை 10-12 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க..
  • ஜூன் 1 ஆம் தேதி முதல் 200 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த ரயில்களுக்கான அட்டவணையை இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு ரயில் சேவை இடம்பெறவில்லை. மேலும் படிக்க..
  • சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரத்தில் அதிகபட்சமாக 1,538 பேர் கொரோனாவால் பாதிப்பு கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,192 ஆக உயர்வு. திரு.வி.க. நகரில் 976ஆக உயர்ந்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
  • அந்தந்த பள்ளிகளிலேயே 10 மற்றும் 12ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு நடைபெறும். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தகவல். ஜூலை மாத இறுதியில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
  • புதுச்சேரி – காரைக்கால் இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம். கடலூர், நாகையில் பயணிகள் ஏறவோ, இறங்கவோ அனுமதி மறுப்பு.
  • அமெரிக்க நடிகர்களை விட மேன்மையான திறமையான நடிகர் கமல்ஹாசன் என ஹாலிவுட் நடிகை மெக்கன்சி வெஸ்ட்மோர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது தந்தையுடன் சிறு வயதில் கமலை பார்த்து பிரமித்து போனதாக தெரிவித்துள்ளார்.
  • கிரிக்கெட் பந்தில் உமிழ்நீரை பயன்படுத்தாமல் இருக்க பயிற்சி எடுக்க வேண்டும் என இந்திய அணியின் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
  • மதுரை மாநகராட்சி பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு  அபராதம் விதிக்கப்பட்டது. நேற்று, மட்டும் மதுரையில் முகக்கவசம் அணியாத 500 பேருக்கு ரூ.59,800 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் படிக்க..
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

4 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

4 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

7 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago