வரலாற்றில் இன்று(06.05.2020)…. மண்ணுலகம் காக்க நரசிம்மர் அவதாரமாக பரம்பொருள் அவதரித்த தினம் இன்று…

Published by
Kaliraj

இந்து சமய மார்க்கத்தில் பல எண்ணற்ற தெய்வங்களை கொண்டிருந்தாலும்  அன்பு மற்றும் எல்லா இடத்திலும், எல்லோரிடத்திலும் இறைவன் நிறைந்திருக்கிறான் என்பதையே அனைத்து  தெய்வங்களும்  உணர்த்துவதாக இருக்கிறது. அப்படி இறைவனை முழுமையாக நம்பி, அவனை நம்பினால் கை விடமாட்டார் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்தது தான் இந்த நரசிம்ம அவதாரம். காக்கும் கடவுளான மகா விஷ்ணு எடுத்த அவதாரங்களிலேயே அவருக்கே மிகவும் பிடித்த அவதாரம் என்றால் அது நரசிம்ம அவதாரம் தான். இந்தாண்டு  மே மாதம் 06ம் தேதி அதாவது இன்று  நரசிம்மர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
மகா விஷ்ணுவின் தசாவதாரங்களில் 4வது அவதாரம் தான் இந்த நரசிம்ம அவதாரம்.  கடவுளிடம் கடும் தவம் புரிந்து சாகா வரம் கிடைக்காது என்பதை அறிந்தும்  அரக்கன் இரணியன் சிவபெருமானிடம் கேட்ட வினோத வரத்தை கேட்டான் அந்த வரமானது, எனக்கு பகல் பொழுதில் மரணம் ஏற்படக் கூடாது,
இரவு பொழுதிலும் மரணம் நிகழக் கூடாது,மனிதனால் மரணம் ஏற்படக் கூடாது,மிருகத்தாலும் மரணம் ஏற்படக் கூடாது, ஆகாயத்திலும் மரணம் நிகழக்கூடாது, பூமியிலும் மரணம் நிகழக்கூடாது, எந்தவொரு ஆயுதத்தாலும் மரணம் நிகழக்கூடாது.என எந்தெந்த வழியில் மரணம் நிகழுமோ அதை எல்லாம் தடுக்கும் வகையில் வரத்தைப் பெற்ற இந்த இரணியன் மக்களையும், தேவர்களையும் கொடுமைப் படுத்தி வந்தான். இரணியனின் ஆணவத்தை அழிப்பதற்காக அவதரித்தவர் சிங்க முகமும், மனித உடலும், பெரிய நகங்களுடன், நாராயணனை நம்பி அழைத்த பிரகாலதனை காக்க ஒரு தூனை பிளந்து கொண்டு அவதரித்தார் நரசிம்மர். எனவே தன்னை நம்பும் பக்தர்களை காக்க எந்த ரூபத்தில் வருவார், எந்த இடத்திலிருந்து வருவார் என்று தெரியாது. இருப்பினும் அழைத்த குரலுக்கும், நம்பிக்கையோடு அழைத்தால் வருவார் என்பது நிச்சயம்.இதையே இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன். அவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்ற வாக்குக்கு இணங்க இந்நிகழ்வு அமைந்தது. ஏன் நீங்கள் உள்ளன்போடு இதை வாசிக்கும் இந்த பதிவில் கூட அவன் நிறைந்திருப்பான். மனமே வாழ்வு, பலவீனமே மரணம். 

Recent Posts

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

11 minutes ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

32 minutes ago

ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா? – நடந்தது என்ன? விமானப்படை பதில்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…

33 minutes ago

திடீரென மயக்கம் போட்ட விஷால்…இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…

48 minutes ago

சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!

மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…

1 hour ago

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

2 hours ago