ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா தனது புதிய மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் புதிய ஹோண்டா சிபி 350 ஆர்எஸ் மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கின் விலை ரூ.1,96,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது சிபி 350 ஐ விட சுமார் 10 ஆயிரம் ரூபாய் அதிகம் என கூறப்படுகிறது. புதிய ஹோண்டா சிபி 350 ஆர்எஸ் பிளாக் மற்றும் ரேடியண்ட் ரெட் மெட்டாலிக் கலரில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றன. நீண்ட தூர பயணங்களில் கூட, பைக் ஓட்டும் நபருக்கும், அதில் அமர்ந்திருக்கும் நபருக்கும் ஏற்றவாறு பைக் தயாரிக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறுகிறது.
இந்த மோட்டார்சைக்கிளில் 350சிசி, ஏர்-கூல்டு 4 ஸ்டிரோக் OHC சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 20.7 பிஹெச்பி பவர், 30 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. ஹோண்டா சிபி 350 இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட பைக்குகளை விற்பனை செய்துள்ளது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…