மாஸ்டர் திரைப்படம் வருகின்ற 13ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், இயக்குனர் மிஷ்கின் அந்த திரைப்படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து உள்ளார்கள் திரையங்குகளில் 50 % பார்வையாளர்களுக்கு மட்டும் தான் அனுமதி என்று தமிழக அரசு அனுமதித்த நிலையில், வருகின்ற 13ம் திரையங்குகளில் வெளியாகும் மாஸ்டர் படத்திற்கு 50 சதவீதம் மக்கள் மட்டுமே படத்தை பார்க்கச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த மாஸ்டர் திரைப்படத்தை பார்க்க அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் இருக்கும் நிலையில் பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆவலாக இருக்கிறார்கள் என்றே கூறலாம். அந்த வகையில் இயக்குனர் மிஷ்கின் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் இயக்கியுள்ள பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்திற்கான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு “
அதில், “கதை இல்லாமல், படம் இல்லாமல் எங்கள் வாழ்க்கை அர்த்தமற்றது. குடும்பத்துடன் தியேட்டருக்குச் செல்லுங்கள். மாஸ்டர் படத்தின் 13 வது வெளியீட்டைக் காணவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். தியேட்டருக்குச் செல்வதன் மூலம் சினிமா தொழில் மீண்டும் வளரும். என்று பதிவிட்டுள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…