இந்திய பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் – துருக்கி அரசு!

Published by
Rebekal

இந்தியா உட்பட சில நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என துருக்கி அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிக அளவில் பரவி வருவதால் இந்திய பயணிகளுக்கு பல்வேறு நாடுகளில் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துருக்கியிலும் இந்திய பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. துருக்கியில் ஏற்கனவே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 47 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது துருக்கி விமான துறை கொரோனா கட்டுப்டுகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், பிரேசில், தென்னாப்ரிக்கா நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் மேற்கொள்ளப்படும் எனவும், மேலும் அவர்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ்களையும் அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

அந்த 8 நாடுகளை தவிர பிற நாட்டினர் துருக்கிக்கு வருவதாக இருந்தால் தடுப்பூசி செலுத்திக்கொண்டு 14 நாட்களுக்கு முன்பதாகவே வரலாம், அவர்கள் தனிமைப்படுத்துதலுக்கு உள்ளாக மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து குணமாகி இருந்தாலும் அவர்கள் துருக்கிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

35 minutes ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

51 minutes ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

2 hours ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

2 hours ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

2 hours ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago