இந்தியா மற்றும் உலகின் பல பகுதிகளில் இன்ஸ்டாகிராம் சேவை இன்று முடக்கப்பட்டது.
மக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரபல சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம், இந்தியாவிலும், உலகின் சில பகுதிகளிலும் இன்று காலை திடீரென்று முடங்கியது.
இன்று காலை 11 மணியளவில் சர்வர் கோளாறால் இன்ஸ்டாகிராம் சேவை இந்தியாவிலும், உலகின் சில பகுதிகளிலும் திடீரென முடங்கியதாக இணையதளங்களை கண்காணிப்பு வலைத்தளமான டவுன் டிடக்டர் கூறியது.குறிப்பாக,சுமார் 45% தங்களின் மொபைல்களில் இன்ஸ்டாகிராம் செயலி லோட் ஆகவில்லை எனவும், 33% வெப்சைட்டில் இன்ஸ்டாகிராம் லோட் ஆகவில்லை எனவும் மீதமுள்ள 22 சதவீதத்தினர் சர்வர் இணைப்பில் கோளாறுகள் ஏற்பட்டிருப்பதாக காட்டுவதாக புகார்கள் அளித்ததாக டவுன் டிடக்டர் தெரிவித்தது.எனினும்,பிழையின் காரணம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதனால்,இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை பதிவேற்ற முடியாமல் அவதிப்பட்டனர்.மேலும், பயனர்களின் கவனம் ட்விட்டர் பக்கம் திரும்பியது.இதனையடுத்து, பிற்பகல் 3 மணிக்கு பிறகு இந்த பாதிப்பு கணிசமாக குறைந்து பயன்பாட்டிற்கு மீண்டும் வந்துள்ளது.இதனால்,பெரும்பாலான பயனர்கள் தங்களது புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை மீண்டும் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையில்,இன்ஸ்டாகிராம் செயலி முடங்கியது குறித்து பயனர்கள் அதிர்ச்சியுடனும்,கேளிக்கையுடனும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து மீம்களை பகிர்ந்து வருகின்றனர்.இவை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதோ அவை:
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…