இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது.இந்நிலையில் இன்று 6-வது சர்வதேச யோகா தினத்தை ஒட்டி நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி யோகா குறித்து உரையாற்றியுள்ளார்.
சர்வதேச யோகா தினமானது ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை வரவேற்கும் விதமாகவும் உடல் ஆரோக்கியத்தை வழுப்படுத்தும் கலைகளில் ஒன்றாக திகழக்கூடியதுமான யோகா நம்பிக்கையை விதைக்கும் என நாட்டு மக்களிடம் இன்று காலை 6.30 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.
நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி 6ஆவது சர்வதேச யோகா தினத்திற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும். சர்வதேச அளவில் ஒற்றுமையை பறைசாற்றும் நாளாக இந்நாள் அமைந்துள்ளது.
இந்த ஆண்டு குடும்பத்துடன் யோகா செய்யுங்கள், கொரோனா பரவி வரும் நிலையில் நாட்டு மக்கள் யோகா கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளதாக தெரிவித்த பிரதமர் உங்களது அன்றாட வாழ்க்கையில் யோகாவை ஒரு அங்கமாக பழக்குங்கள். யோகா உடல் வலிமையுடன் நம் மன வலிமையையும் மேம்படுத்துகிறது. யோகாவிற்கு மதம், மொழி, நாடு என்ற எந்த பேதமும் கிடையாது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த உலகம் தற்போது யோகாவின் பயன்களை உணர்ந்துள்ளது. பகவத் கீதையில் கூட கிருஷ்ணர் யோகா குறித்து குறிப்பிட்டுள்ளார். கொரோனாவில் இருந்து மீண்டு வர யோகா செய்யுங்கள் என்று பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்.
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…