சிம்பு அவர்கள் திரிஷாவை திருமணம் செய்து கொள்ள போவதாக முன்னணி தளம் ஒன்று செய்தியை வெளியிட்டுள்ளது.
நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்திலும், கௌதம் மேனனின் விண்ணை தாண்டி வருவாயா-2 படத்திலும் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் முன்னோட்டமாக திரிஷாவுடன் இணைந்து கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் வெளியாகி ரசிகர்கள் இடையில் மிகுந்த வரவேற்பை பெற்றதோடு விமர்சனத்தையும் அள்ளி குவித்தது. இவரது திருமணம் குறித்து வழக்கமாக பல செய்திகள் வெளியாகும்.
இந்த நிலையில் தற்போது முன்னணி தளம் ஒன்று சிம்புவின் திருமணம் குறித்து வெளியிட்ட தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம் பிலிம் ஃபேர் நிறுவனம், சிம்பு அவர்கள் திரிஷாவை திருமணம் செய்து கொள்ள போவதாக செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இதுகுறித்து சிம்பு அல்லது திரிஷா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும். தற்போது இந்த செய்தி சோஷியல் மீடியாக்களில் தீயாய் பரவி வருகிறது.
சென்னை : வங்கதேசம், மேற்கு வங்கத்தில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
சென்னை : நேற்றைய தினம் அன்புமணிக்கு பக்குவமோ, தலைமைப் பண்போ இல்லை என்றும், வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிட்டது என்றும்…
சென்னை : ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் அதிகரித்த நிலையில், திலகபாமா அன்புமணிக்கு ஆதரவாக இருந்தார். இந்த நிலையில், பாமக…
டெல்லி : இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த மாதம் தங்கக் கடன் வாங்குவது தொடர்பாக புதிய விதிகளை வெளியிட்டது.…
சென்னை : சென்னை மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற்று…
பாங்காக் : தாய்லாந்தின் ஃபூகெட்டில் உள்ள பிரபலமான சுற்றுலா பூங்காவில் ஒரு இந்திய மனிதனை புலி தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…