இது கௌதம் மேனன் படம்தானா.?! மிரட்டும் தோற்றத்தில் சிம்பு.! வெந்து தணிந்தது காடு.!

Published by
பால முருகன்

சிம்புவின் 47- வது படத்திற்கு “வெந்து தணிந்தது காடு” என்று வைக்கப்பட்டு அதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் அழகான காதல் கதைகளை இசையுடன் சேர்ந்து ரசிகர்களுக்கு எப்போதும் ரசிக்கும்படி படங்களை இயக்குவதில் வல்லவர் இயக்குனர் கெளதம் மேனன். இவரது இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த இரண்டு திரைப்படங்கள் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா.

இந்த இரண்டுதிரைப்படங்களுக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் துல்லியமான இசையில், அற்புதமான பாடல்களை கொடுத்திருந்தார். இந்த இரண்டு படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இதே கூட்டணி இணைந்து ஒரு திரைப்படம் எடுக்கப்படவுள்ளதாகவும், இந்தபடத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் வைக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இந்த பட அறிவிப்பு வெளியாகி மாதங்கள் கடந்தும் படத்திற்கான ஷூட்டிங் மற்றும் மற்ற வேலைகள் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் தலைப்பு மாற்றம் செய்யப்பட்டு தலைப்புடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மதியம் 12.15க்கு வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

அதன் படி தற்போது இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு “வெந்து தணிந்தது காடு” என்று வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் வித்தியாசமான தோற்றத்தில் சிம்பு உள்ளார். இதனை நடிகர் சிம்பு தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்களுக்கு காதலை மையமாக வைத்து படங்களை கொடுத்து வந்த இயக்குனர் கெளதம் மேனன் தற்போது வித்தியாசமாக படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.

போஸ்ட்டரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது என்றே கூறலாம். இந்த படத்தை ஐசரி கணேசன் வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

11 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

12 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

13 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

13 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

15 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

17 hours ago