அட்லி தயாரிப்பில் ஜெயம் ரவி நடிப்பதாக கூறியதற்கு அவரே உண்மையான பதிலை கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து கொண்டிருப்பவர் ஜெயம் ரவி. அவர் தற்போது சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் லட்சுமணன் இயக்கும் பூமி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் இவர் அடுத்ததாக அட்லி தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க போவதாகவும், அதை அவரது உதவியாளரான ரவி இயக்குவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, அட்லியை சமீபத்தில் நட்பு முறையில் சந்தித்ததாகவும், அப்போது அட்லி தனது உதவியாளர் ரவியிடம் எனக்கான கதை ஒன்று இருப்பதாக தெரிவித்தார். ஆனால் தற்போது உள்ள கொரோனா சூழல் காரணமாக கதை இன்னும் கேட்கவில்லை என்றும், அதனை அட்லி தான் தயாரிக்கிறாரா என்பது முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…