அனிருத் குரலில் ஜெயம்ரவியின் ‘பூமி’ பட பாடல்.!

Published by
Ragi

ஜெயம்ரவியின் பூமி படத்திலுள்ள தமிழன் என்று சொல்லடா என்ற பாடலை அனிருத் அவர்கள் பாடியுள்ளார்.

நடிகர் ஜெயம்ரவி கடைசியாக கோமாளி என்ற படத்தில் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை அள்ளி குவித்தார். தற்போது இவர் பூமி, ஜன கண மன, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பூமி திரைப்படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரிக்க லட்சுமணன் இயக்கியுள்ளார் .இவர் ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் ரோனிட் ராய், சதீஷ், ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். ஊரடங்கிற்கு முன்பு படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. மே மாதத்தில் வெளியாகவிருந்த இந்த படம் கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது . ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், செக்கன்ட் லுக் மற்றும் மூன்றாவது லுக் போஸ்ட்ர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, சமீபத்தில் இந்த படத்திலிருந்து ‘தமிழன் என்று சொல்லடா’ என்ற பாடல் செப்டம்பர் 10ம் தேதி வெளியிடவுள்ளதாக டி. இமான் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார் . மேலும் அதன் புரோமோ வீடியோவையும் டி. இமான் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த பாடலை அனிருத் பாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் பாடும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அனிருத் குரலில் பட்டையகிளப்பும் வரிகளுடன் வெளியாகவிருக்கும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Published by
Ragi

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

2 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

3 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

4 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

4 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

5 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

5 hours ago