ஜியோ-இன்டெல் ஒப்பந்தம்.! ரூ. 1,894.5கோடி முதலீடு, 0.39சதவீத பங்கு விற்பனை.!

Published by
Ragi

ஜியோ தனது 0.39 சதவீத பங்கை இன்டெல் நிறுவனத்திற்கு ரூ. 1,894.5கோடிக்கு விற்பனை செய்துள்ளதாக ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.

திரைப்படம், செய்தி, இசை செயலிகள் மற்றும் தொலை தொடர்பு நிறுவனமான ஜியோ இன்ஃபோகாம் ஆகியவற்றை இயக்கும் ஜியோ, மிகப் பெரிய நிதியை திரட்டியிருக்கிறது கடந்த ஏப்ரல் 22 அன்று ஜியோ தனது 9.99சதவீத பங்கை ரூ. 43,574 கோடிக்கு விற்பனை செய்ததன் மூலம் தனது நிதியை திரட்ட ஆரம்பித்தது. இந்த நிலையில் தற்போது இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இந்தியாவில் செயல்பட்டு வரும் இன்டெல் ரூ. 1,894.5 கோடி முதலீடு செய்து ஜியோவின் 0.39 சதவீத பங்குகளை வாங்குவதாக ரிலையன்ஸ் குழுமம் அறிவித்துள்ளது.

இது கடந்த பதினொரு வாரங்களுக்குள் ரிலையன்ஸ் குழுமத்தில் நடந்திருக்கும் 12-வது ஒப்பந்தமாகும். எனவே ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் இதுவரை பேஸ்புக், சில்வர் லேக் பார்ட்னர்ஸ் இடம் இருந்து இரண்டு முதலீடுகளும், விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ், ஜெனரல் அட்லாண்டிக், கே. கே. ஆர், முபடாலா, ஏ. டி. ஐ. ஏ. டி. பி. ஜி, எல் கேட்டர்டன், பி. ஐ. எஃப்  மற்றும் தற்போதுள்ள இன்டெல் ஆகிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின்  முதலீடையும் சேர்த்து ரூ. 1,17,588.45 கோடி வரை திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுவே ஒரு நிறுவனம் திரட்டிய நிதியில் உலகின் மிகப்பெரிய ஒன்றாக கருதப்படுகிறது. இந்த இன்டெல் நிறுவனம் 1991 முதல் உலகளவில் உள்ள 1,582 -க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 12.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
Ragi

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

33 minutes ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

2 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

2 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago